கூடுதலாக வரி வசூல் செய்யக் கூடாது: அமைச்சர் வேலுமணி
திருச்சிராப்பள்ளி, செப்.10- திருச்சி கலையரங்கத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரை யாடல் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறிய தாவது: மாநகராட்சிகளில் வீட்டு வரி கூடுதலாக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். கடைசியாக கடந்த 2008 -2009ம் ஆண்டு தான் வரி உயர்த்தப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்த போது, கூடுதலாக வரி வசூலித்தால் மக்க ளுக்கு நல்லத் திட்டங்களை செய்ய முடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வரி வசூல் செய்வதை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. நீண்ட காலமாக வரி உயர்த்தப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால் சில இடங்களில் கூடுதலாக வரி வசூல் செய்வதை மாற்றி அமைத்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரே சீராக வரி வசூல்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து வரி மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும் வரை யாரும் கூடுதலாக வரி வசூல் செய்யக்கூடாது என்று கூறி யிருக்கின்றோம். அப்படி பொதுமக்களிடம் கூடுதல் வரி வசூல் செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
சுமைப்பணி தொழிலாளர் ஓய்வறை கட்டித் தர வேண்டும் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, செப்.10-சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் திங்களன்று காந்தி மார்க்கெட் பகுதியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ராமர் வாசித்தார். கூட்டத்தில் மத்திய அரசு தொழிலாளர் சட்ட திருத்தம் மற்றும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதியுடன் கூடிய ஓய்வறை கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து ஊர்வல மாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பாபு, சதா சிவம், மாவட்ட துணை செயலாளர் சேகர் உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பூங்காவை விட்டு மீண்டும் காட்டிற்கு திரும்பும் மான்கள்
தஞ்சாவூர், செப்.10- தஞ்சை சிவகங்கை பூங்காவில் 50 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மான்கள் கோடியக்கரை வனப்பகுதிக்கு, திங்கள்கிழமை லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. தஞ்சை சிவகங்கை பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 8.10 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகி றது. இந்த பூங்காவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 8 ஆண் மான்கள் உள்பட மொத்தம் 41 மான்கள் இருந்தன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பரா மரிக்கக் கூடாது என சட்டம் உள்ளதால், பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இட மாற்றம் செய்வது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பூங்காவில் உள்ள 41 மான்களையும், நாகை மாவட்டம் கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை லாரி ஒன்றில் மரக்கூண்டு அமைக்கப்பட்டு ஒரு கூண்டில் 8 முதல் 10 மான்கள் என்கிற எண்ணிக்கை யில் கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகை யில், மான்களை மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் தான் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகிறது. அதே போல், இந்த மான்கள் வளர்வதற்கான ஏற்ற சூழல், கோடியக்கரையில் உள்ளதா என கால்நடை மருத்துவக் குழுவினர் 10 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். மான்கள் புதிய சூழலில் வாழும் போது உயிரிழப்பு ஏதும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது” என்றார்.
தரமற்ற சாலைப் பணி தடுத்து நிறுத்திய மக்கள்
தரங்கம்பாடி, செப்.10- நாகை மாவட்டம் ஆக்கூரில் தரமின்றி அமைக்கப் பட்ட சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பாதி யிலேயே வேலையை நிறுத்தி விட்டு மீண்டும் பணியை துவங்காமல் ஒப்பந்த பணி நிறுவனம் மக்களை அலட்சி யப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆக்கூரில் இந்திராகாந்தி வீதி சாலை மிகவும் சேதம டைந்து குண்டும், குழியுமாக கிடந்த நிலையில் பொது மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி துவங்கியது. ஆரம்பக்கட்ட பணியிலிருந்தே மிகவும் தரமின்றி சாலை அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரின் தலைமையில் தடுத்து நிறுத்திய தோடு தரமானதாக சாலையை போடுங்கள் என வலி யுறுத்தினர். ஆக்கூர், பூந்தாழை, உடையவர்கோவில்பத்து உள்ளிட்ட கிராமங்களின் இணைப்பு சாலையாகவும், மருத்துவமனை, வீஏஓ அலுவலகம், சிவன் கோவில் ஆகிய வற்றிற்கு செல்லும் சாலையாகவும் உள்ள இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் மிகவும் சேத மாகி பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்ற கார ணத்தை பொதுமக்கள் வலியுறுத்தியும், பல நாட்களாகி யும் சாலைப் பணியை மீண்டும் துவக்காமல் உள்ளனர். இதனிடையே கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன், கிளை செயலாளர் சிவசுப்ரமணியன் கிடப்பில் கிடக்கும் சாலைப் பணியை பார்வையிட்டதோடு உடனடியாக சாலை பணியை துவக்கி தரமானதாக அமைக்கவில்லையெனில் போராட்டம் நடத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
வீரசோழனில் காவிரி நீர்
தரங்கம்பாடி, செப்.10- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையார், தேவானூர், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல், அரும்பாக்கம் உள்ளிட்ட கடைமடை பகுதிக்கு வீரசோழன் ஆறு மூலம் காவிரி நீர் செவ்வா யன்று வந்தடைந்தது. ஆறு, கிளை பாசன வாய்க்கால்கள் இப்பகுதி களில் தூர்வாரி இருப்பதால் காவிரி தடையின்றி பாசன வசதிக்கு பயன்படும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.