திருத்துறைப்பூண்டி, ஜூலை 27- திருவாரூர் மாவட்ட சி.ஐ.டி.யு 8 வது மாநாட்டு பேரணி சனிக்கிழமை மாலை திருத்துறைப்பூண்டியில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து வர வேற்புக்குழு தலைவர் பி.என்.லெனின், செயலாளர் எம்.பி.கே.பாண்டியன் ஆகியோர் தலைமையில் துவங்கப் பட்டது. பேரணியை சிஐடியு மாவட்ட துணை தலைவர் நா.பாலசுப்பிரமணி யன் துவக்கி வைத்தார். மாநில செய லாளர் ஆர்.மோகன், மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் இரா.மாலதி, மாவட்ட நிர்வா கிகள் ஜி.பழனிவேல், எம்.கே.என்.ஹனிபா, எஸ்.வைத்தியநாதன், பி.நட ராஜன், வி.சுப்பிரமணியன், வி.தவ மணி, ஆர்.மோகன் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்க தலைவர்கள், தோழர்கள் உள்ளிட்டோர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், ஒன்றிய செய லாளர் டி.வி.காரல்மார்க்ஸ், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் உள்பட 3500 பேர் பேரணியில் கலந்து கொண்ட னர். நிறைவாக பேரணி திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில செய லாளர் ஆர்.மோகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றி னர்.