தேவாரத்தினை பாடிய திருஞானசம்பந்தர் விநாயகருக்கு எடுத்த விழா முத்துப்பல்லக்கு விழா என்பது ஐதீகம். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். தஞ்சாவூரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 முத்து பல்லக்கு கலந்து கொண்டன.