தஞ்சாவூர் ஜூன்.2-தஞ்சாவூர் கீழவாசல் சிராஜூதீன் நகர் மதினா பள்ளிவாசலில் ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிவாசல் முத்தவல்லி, மக்கா, மதினா ஈமான் அறக்கட்டளை கவுரவத் தலைவர் எம்.சிராஜூதீன் தலைமை வகித்தார். பள்ளிவாசல் இமாம் எம்.ஏ.காஜா முகைதீன் கௌசி கிராஅத் ஓதினார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், திமுக மாவட்டச் செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் எஸ்.காலித் அகமது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், வசந்தம் லயன்ஸ் சங்க தலைவர் ஏ.ஜெயபால், அருட்தந்தையர்கள் ஜெ.அமல்தாஸ் ஜான், பி.ஜெயபால், மக்கா, மதினா ஈமான் அறக்கட்டளை நிர்வாகிகள் இ.வாசிம் ராஜா, ஆர்.எஸ்.ஜாகிர் உசேன், ஜாபர் உசேன், ஏ.ஜெ.அப்துல்லாஹ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக லயன்ஸ் சங்க நிர்வாகி ரமேஷ் மாரி நன்றி கூறினார்.