tamilnadu

img

அரியமங்கலம் குப்பைக் கிடங்கை அகற்றாவிட்டால் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:  திருச்சி அரியமங்கலத்தில் மாநக ராட்சிக்கு சொந்தமான 47 ஏக்கர் பரப்ப ளவில் குப்பை கிடங்கு உள்ளது.  மாநக ராட்சி 65 வார்டுகளில் தினமும் சேக ரிக்கப்படும் சுமார் 400டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் இங்கு குப்பைகள் மலைபோல் காணப் படுகிறது. ஆண்டுக்கணக்கில் அங்கு குப்பைகள் கிடப்பதால் அவை நன்கு காய்ந்து கிடந்தன.  இந்நிலையில் கடந்த 8-ம் தேதி யன்று காலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. 8ம் தேதி முதல் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் திருச்சி– தஞ்சை சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டை காலி செய்து விட்டு செல்லும் நிலை உள்ளது.  மேலும் அப்பகுதியில் உள்ள தனி யார் பள்ளிகள் மற்றும் வணிக வளா கத்தில் உள்ள நிறுவனங்களும் விடு முறை விட்டு மூடப்பட்டுள்ளன. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் புகை மூட்டத்தால் சுவாச கோளாறு, அலர்ஜி, தோல்நோய் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும்.  நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த குப்பை கிடங்கை மாநகராட்சி நிர்வாகம் பல கோடி செலவு செய்து உரம் தயாரிப்பது என்றெல்லாம் கூறி வந்தாலும் அவை அனைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இது அரசின், மாநகராட்சியின் கழிவு மேம்பாட்டை கையாள்வதில் ஏற்பட்ட தோல்வியாகவே கருத வேண்டி உள்ளது.  தற்போது கடந்த 4 நாட்களாக குப்பை கிடங்கு எரிந்து கொண்டிருப்ப தும் அதை அணைக்க முடியாமல் மாநக ராட்சி தவிப்பதும் வெட்க கேடானது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உட னடியாக அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அந்த செய்தி குறிப்பில் ராஜா தெரி வித்துள்ளார்.