tamilnadu

img

திருச்சியில் கல்வி உரிமை மாநில மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- கல்வி உரிமை மாநாட்டிற்கான வர வேற்பு குழு அமைப்பு கூட்டம் திருச்சி பிஷப் கல்லூரியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் நந்தலாலா தலைமை வகித்தார்.  கூட்டத்தில் மாநாட் டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் கலந்து கொள்ளும் ஆளுமை குறித்து தமு எகச மாநில கௌரவ தலைவர் தமிழ்ச் செல்வன் பேசினார். மாநாடு நடத்துவதற்கான தேவை குறித்து தமுஎகச மாநில பொது செய லாளர் ஆதவன் தீட்சண்யா, இணைச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் பேசி னர். கூட்டத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில அள விலான கல்வி உரிமை மாநாட்டை இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநாடாக நடத்துவது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் வரவேற்புக்குழு கௌரவ தலைவராக கே.என்.நேரு, தலைவராக நந்தலாலா, செயலாள ராக ரங்கராசன், பொருளாளராக காளிராஜ் மற்றும் ஜோஸப் கல்லூரி, ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர்கள், பிஷப் கல்லூரி பேராயர், இந்திய மாணவர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், தொழிற்சங்க தலைவர்கள் கொண்ட வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக தமுஎகச மாவட்ட செய லாளர் ரங்கராசன் வரவேற்றார். பொரு ளாளர் காளிராஜ் நன்றி கூறினார்.