புதுக்கோட்டை, அக்.18- புதுக்கோட்டை அம்மா சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் சிறுதானியங்கள் விற்பனை யினை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி புதன்கிழமை யன்று தொடங்கி வைத்து பேசியது: புதுக்கோட்டை மாவட் டத்தில் செயல்பட்டு வரும் உழ வர் உற்பத்தியாளர் நிறுவ னங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய அரிசிகள், பயறு வகை பருப்புகள், மாவு வகைகள், அவல் மற்றும் சிறுதானிய சிற்றுண்டிகள் ஆகி யவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலையில் 250 கிராம், 500 கிராம் பொட்டலங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் இரண்டு பல்பொருள் அங்காடிகளிலும் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஐந்து கூட்டுறவு சிறப்பு அங்காடிக ளிலும் விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்றைய தினம் புதுக்கோட்டை நகராட்சி, கீழ 2ஆம் வீதி, அர்பன் கூட்டுறவு பண்டக சாலை அம்மா சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் சிறுதானியங்கள் விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக் கோட்டை பிரகதம்பாள் கோவில் எதிரே யுள்ள அர்பன் -17 அங்காடி, திருமயம் கூட்டுறவு விற்பனை சங்கம், அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்கம், அம்மா சிறு பல்பொருள் அங்காடி மற்றும் புதுக் கோட்டை கீழ ராஜ வீதி, பிருந்தாவனம் மற்றும் கம்பன் நகரில் அமைந்துள்ள அம்மா அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடிகளில் பராம்பரிய தானியங்கள் மற்றும் சிற்றுண்டி கள் விற்பனை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னனு குடும்ப அட்டை தாரர்கள் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் நமது பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய சிற்றுண்டிகளை நியாய விலைக்கடைகளில் பெற்று பயன்பெற வேண்டுமாறு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.