அரியலூர், ஜூன் 10- முந்திரி விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென அரியலூர் அண்ணாசிலை முன்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜெ.வரப்பிரசாதம், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் டி.தியாகராஜன் முன்னிலை வகித்தனர் விவசாய சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் மாவட்ட வெயலாளர் கே.மகாராஜன் பொருளாளர் ஆர்.இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து விவசாயிகளும் கோரிக்கை மனுவை கொடுத்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.