tamilnadu

img

நூறு நாள் வேலையில் கட்டுப்படியான கூலித்தொகை வழங்க கோரிக்கை

பெரம்பலூர், செப்.14- பெரம்பலூர் துறைமங்கலத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு முழுமையாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். கட்டுப்படியான கூலித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி அக்.14-ம் தேதி தொழிலாளர்கள் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது, சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க கோரி அனைத்து விவசாய சங்கம் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.