tamilnadu

img

பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர், ஆக.30-  தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர்கள் எஸ்.ரவி(தஞ்சாவூர்), ஆர்.ரவி(அரியலூர்), டி.கூத்தை யன் (பெரம்பலூர்), டி.மணி வண்ணன் (திருவாரூர்), எம்.ஜூலைகா (நாகை), எஸ்.பாலசுப்பிரமணியன் (புதுகை) ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ். ஹேமலதா போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் ஏ.ரெங்கசாமி, ஆய்வக நுட்பநர் சங்க மாநிலத் தலைவர் சாந்தாராமன், வருவாய்த் துறை அலுவலர் சங்கம் தமிழ்வாணன் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மருந்தாளுநர் சங்க மாநிலப் பொருளாளர் அ.விஸ்வேஸ்வரன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் கே.ரமேஷ் நன்றி கூறினார்.  காலியாகவுள்ள 700-க்கும் அதிக மான மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருந்தியல் அல்லாத நோயாளர் நலச் சங்கப் பணியிலிருந்து மருந்தா ளுநர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் தஞ்சாவூர் கே.பாஸ்கரன், நாகை என்.ஜி.பாஸ்கரன், திருவாரூர் எஸ்.தியாகராஜன், அரியலூர் என்.அசோகன், பெரம்பலூர் எம்.விஜயலெட்சுமி, புதுக்கோட்டை ஏ.வள்ளியப்பன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.