tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் சிறப்புரையாற்றினார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினார். இதில் கரூர் நகரம், பரமத்தி அரவக்குறிச்சி கரூர் ஒன்றியங்கள், கடவூர் வட்டக்குழு ஆகியவைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.