tamilnadu

img

உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ஜூன் 18- கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு அறி வித்துள்ள ஏழாவது ஊதியக்குழு அறிவிப்பின்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் மற்றும் என்.எம்.ஆர் ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமையேற்றார்.  கோரிக்கைகளை விளக்கி மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சங்க மாவட்ட செயலாளர் கே.முனியாண்டி, தொழிற்சங்கத் தலைவர்கள் எம்.பி.கே.பாண்டியன், டி.லோகநாயகி, ஞான சேகரன், டி.கலியபெருமாள், எஸ்.தமிழ்செல்வன், எஸ்.காமராஜ் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.