tamilnadu

img

திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.11- உள்ளாட்சி தேர்தல் குறித்த திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோ சனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறி வாலயத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாவட்டச் செய லாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பி னர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலா ளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ஏ.பழனிச்சாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகரச் செய லாளர் மு.அன்பழகன், அவைத் தலை வர்கள் அம்பிகாபதி, தர்மலிங்கம், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கலை, கோவிந்தராஜன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி இந்திரஜித், சுரேஷ், சிவ சூரியன், ம.தி.முக. மாவட்டச் செய லாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.