tamilnadu

img

சுடுகாட்டுக்குப் பாதை இல்லாததால் வயலில் இறங்கிச் செல்லும் அவலம்

வேலங்குடி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மனு கொடுத்தார்.

கமுதகுடி சுடுகாட்டுக்கு வழியின்றி வயலில் இறங்கி செல்லும் அவல நிலையில்.

குடவாசல், அக்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள வேலங்குடி ஊராட்சி கிராமத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் மக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களும் பெறப்பட்டன. இதில் கமுதகுடி கிராமத்துக்கு சுடுகாட்டுப் பாதை பெற்றுத் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தியிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். வேலங்குடி ஊராட்சி கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள்  உள்ளன. அனைத்து சமூக மக்களும் ஒரே திடலில் சுடுகாடு பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் அரசு சார்பில் இக்கிராமத்து க்கு மயானக் கொட்டகை கட்டித் தரப் பட்டுள்ளது. ஆனால் இந்த மயானக் கொட்டகை அமைந்துள்ள இடம் தனித் தீவு போல வயல்வெளிகளுக்கு நடுவே உள்ளது. இதற்கு செல்லும் பாதை ஒற்றையடிப் பாதையாக இருக்கிறது.  கோடைக் காலத்தில் வயல் வழியாக செல்வதே சிரமமாக உள்ளது. மேலும் மழை காலங்களில் வயல்களில் இறங்கி செல்லவே முடியாமல் தவிக்கும் அவல நிலை உள்ளது என்று வேதனையுடன் அந்தப் பகுதி மக்கள் தங்கள் குறை களை கூறினர். இதனைக் கேட்டறிந்த மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக ளோடு தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட இடத்தை விரிவாக ஆய்வு செய்து சுடு காட்டுக்கு பாதை அமைத்துத் தர கேட்டுக் கொண்டார். கட்சித் தோழர்களும் இந்தக் கோ ரிக்கையை அரசு கையில் எடுத்து தீர்க்கும் வரை கண்காணித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனி.ராஜேந்திரன், வரத.வசந்தராஜன், டி.பி. ராஜா, எம்.ராமமூர்த்தி, கே.எம்.லிங்கம், பி.ஸ்டாலின் மற்றும் கிளைத் தோழர்கள் கலந்து கொண்டனர்.