tamilnadu

img

இந்துசமய அறநிலையத்துறையில் பணி வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
மொத்த காலியிடங்கள்: 13
பணி: தட்டச்சர் - 01
பணி: கணினி இயக்குபவர் - 01
பணி: தொழில்நுட்ப உதவியாளர்(சிவில்) - 01
பணி: தூய்மை பணியாளர்(பெருக்குபவர்) - 10
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, கணினி பிரிவில் இளநிலை பட்டம், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்தில் வேலைநாள்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை நேரில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி - 620 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2021
 

;