தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம் பெரிய நாயகிபுரத்தில் அனைத்துக் கட்சி, மதவாத எதிர்ப்பு கூட்டமை ப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரி மைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில செயலாளர் அப்துல் கரீம் தலைமை வகித்தார். பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், ஆவணம் இமாம் பசீர் அகமது உலவி, செரியலூர் இனாம் ஊராட்சி தலைவர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தனர். ஆவணம் ஜமாஅத் செய லாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநா யக கட்சி மாநில தலைவர் கே.எம். செரீப், தமுஎகச மாநில துணை செய லாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, அய்யாவழி பி.பாலமுருகன் சிறப் புரையாற்றினார்கள். கூட்டத்தில் அனைத்து கட்சியினர் பல்வேறு இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகள், திரளான பெண்கள் கலந்து கொண்ட னர். ஆவணம் ஜமாஅத்தைச் சேர்ந்த முகமது ரஜாக் நன்றி கூறினார். போராட்டக் களத்தில் நோன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 16-ஆவது நாளாக வியாழக்கிழமை தொடர்ந்தது. இதில், இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது போல வியா ழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6.40 மணி வரை உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்றனர். இதையடுத்து, நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி போராட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.