tamilnadu

சுகாதாரமற்ற முறையில் தயாரித்த பானிபூரி விற்கத் தடை

திருச்சிராப்பள்ளி, டிச.12- திருச்சி நகரில் விற்கப்படும் பானிபூரி அனைத்தும் தேவதானம் பகுதியில் ஒரே இடத்தில் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் அந்த பானிபூரி தயாரிக்கும் குடோனில் வியாழன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது நான்கு அறைகளை வாடகைக்கு எடுத்து வடமாநிலத்தை சேர்ந்த 20 இளைஞர்கள் பானிபூரி தயாரித்து விற்பனைக்கு அனுப்புவது தெரியவந்தது. அந்த அறையில் எலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதுடன். சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. பானிபூரிகளை தயாரித்து அவற்றை சுகாதாரமான இடத்தில் சேமித்து வைக்காமல் தரையிலும், அழுக்கடைந்த பாய்களிலும் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டனர். அவற்றை விற்பனை செய்வதை தடை செய்ததுடன் தொடர்ந்து அங்கு பானிபூரி தயாரிக்கவும், தயாரித்தவற்றை விற்கவும் தடை விதித்தனர்.