மயிலாடுதுறை, ஜூலை 10 - மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் இந்த கல்வியாண்டிற்கான முதல் வரலாற்றுத் துறை வாசிப்பு மன்றம் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் ஏ.சீனிவாசன், பேராசிரியர்கள் ஆர்.சாந்தி, எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேராசிரியர்கள் வி.ராஜேந்திரன், ந.கதிரவன் ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்டம் நாங்கூரில் மேற்கொண்ட அகழாய்வில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசிப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.இரா.சங்கரன் செய்திருந்தார்.