tamilnadu

img

அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் ஜூன்.1-தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் இ-சேவை மைய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.இ-சேவை மையங்களைத் தமிழக அரசுத் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சித்து வருகிறது. சென்னை, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் நகராட்சிகளில் இயங்கும் இ-சேவை மையங்களை மூடிவிட்டு அவற்றை தனியாருக்கு விட்டுவிட தமிழக அரசுத் திட்டமிட்டு வருகிறது. இதை கண்டித்தும், ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் கே.அன்பு தலைமை வகித்தார். போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலர் சி.ஜெயபால் தொடங்கி வைத்தார்.