திருச்சிராப்பள்ளி, மே 16- ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தட்டுப்பாடுன்றி உணவு பொருள்கள் கிடைக்க உழைத்த விவசாயிகளை கௌ ரவிக்கும் விதமாக மே 16-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாநகரக் குழு சார்பில் சனியன்று திருவெறும்பூர், மலைக் கோவில், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் தன பால் தலைமை வகித்தார். விவசாயி கள் சங்க மாநில துணை தலைவர் கே. முகமதலி, விச மாநகர் மாவட்ட செயலா ளர் கே.சி.பாண்டியன், வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், சிபிஎம் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் ஆகியோர் விவசாயிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். பழனிவேல், சுப்புரமணி, செல்வராஜ், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.