மயிலாடுதுறை: மயிலாடுதுறை, மன்னம்பந்தல், ஏ.வி.சி கல்லூரி பொருளியல் துறை சார்பில் பொருளியல் மன்றக் கூட்டம நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் பொருளாதாரத் துறை தலைவர் ஆர். வரதராஜன் பொருளியல் மாற்றத்தினையும் அமர்த்தியா சென் மன்றத்தினை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாதாரத் துறை தலைவர் ஆர். கார்த்திகேயன் வரவேற்றார். பொருளியல் மன்ற செயலர் ஏ.ரப்பேல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியை செல்வி மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.