மன்னார்குடி, ஜூன் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எம். திருஞானம் இல்ல விழாவில் மணமக் கள் தி.மேகநாதன் வி.டெய்சிராணி இரு வருக்கும் குடிநீர் கேன்கள் பரிசாக திரு வாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பிரச்சனை யாக உருவெடுத்திருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை உணர்த்தி இதற்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக மணமக்க ளுக்கு குடிநீர் கேன்களை மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அன்பளிப்பாக வழங்கிய போது இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் சிரிப்பலைகளால் திரு மண அரங்கமே அதிர்ந்தது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரிமுத்து தலைமையில் திருவாரூர் ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் மண விழா நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம் வரவேற்றார். திருமணம் நடைபெற்று முடிந்தவுடனேயே அனை வரின் சிந்தனையையும் சிரிப்பையும் தூண்டும் தண்ணீர் கேன் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண விழா வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி இயக்கங்களின் தலைவர்கள் தஞ் சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், திருவாரூர் மாவட் டக்குழு உறுப்பினர்கள் இடைக் கமிட்டி செயலாளர்கள் கட்சி உறுப்பி னர்கள் அனைவரும் கலந்து கொண்ட னர். திருமண விழாவின் முடிவில் மண மகனின் தந்தையும் மன்னார்குடி ஒன் றியச் செயலாளர் எம்.திருஞானம் அனைவருக்கும் நன்றி கூறினார்.