tamilnadu

img

அரசு பெட்ரோலிய பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்காதே!

காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கும்பகோணம், நவ.28-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் கிளை-2 காந்தி நகர் அலுவலகம் முன்பும், டாக்டர் பேசன்  ரோட்டில் உள்ள கிளை 1 அலுவலகம் முன்பும் மத்திய அரசின் பெட்ரோ லியம் நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஏற்பாட்டை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் எல்ஐசி கிளை-1 பெசன்ட் ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பாலசுப்ர மணியம் தலைமை வகித்தார். செயலாளர் ஹச். கண்ணன் பன்னீர்செல்வம் லதா உள்ளிட்ட ஊழியர்களும் எல்ஐசி கிளை  இரண்டில் செயலாளர் சுரேஷ் புருஷோத்த மன் ஆகியோர் தலைமை வகித்தனர். தஞ்சை கோட்ட துணை தலைவர் எஸ். சுப்பிரமணி யன், கிளை செயலாளர் சேகர் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். இதில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் தனியாருக்கு விற்றால் அது எரி சக்தித் துறையிலும், பொருளாதாரத் திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எரி பொருள்கள் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயரும். ஆகவே மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனம் பங்குகளை விற்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. 

இதே போல் புதுக்கோட்டை எல்ஐசி அலு வலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வி.லதாராணி தலைமை வகித்தார். செயலர் வீர.துரைசிங்கம் முன்னி லை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தஞ்சை கோட்ட துணைத் தலைவர் என்.கண்ணம்மாள், வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், ஆனந்த குமார், லிகாய் முகவர் சங்க கிளைச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.