tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை

தஞ்சாவூர் ஜூன்.10- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. கூட்டத்திற்கு பேராவூரணி ஒன்றியத் தலைவர் லாரன்ஸ் சேவியர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், நகரச் செயலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்டத் தலைவர் பகாத் அகமது சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், 'கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். தாமதமானால் போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது.