திருச்சிராப்பள்ளி, ஆக.21- திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப்பாளை யம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் பிள்ளாப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் நைனான் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், ஒன்றி யச் செயலாளர் காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பி ரமணியன், முருகேசன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் மாவட்டச் செயலாளர் ஜெயசீலனிடம் வழங்கப்பட்டது. ஒன்றி யக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.