tamilnadu

கொரோனா பாதிப்பு விவரம் : திருவாரூர் மாவட்டத்தில் குழப்பம்?

திருவாரூர், மே 21- கொரோனா தொற்று பரவல் குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை அன்றாடம் செய்திக் குறிப்பு வெளியிட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து அனை வருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. நிறைய விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த சந்தேகம் நியாயமானது தான் என்று உணரும் வகையில் திருவாரூர் மாவட்ட நிலவரம் உள்ளது.  பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தந்த வர்கள், அவர்களின் தொடர்பா ளர்கள் அவர்களின் மூலமாகவே நோய்த்தொற்று உள்ளதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறி வித்து வந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் 32 பேர் நோய்த் தொற்று க்கு ஆளானவர்கள் என்று தொடர்ந்து கூறி வந்தது.  இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று அனைவரும் குணமாகி சென்று விட்ட நிலையில் திருவாரூர் மாவட்டம் நோய்த்தொற்று இல்லாத மாவட்டம் ஆனது என்று அதிகா ரப்பூர்வ செய்தி ஊடகங்களில் பர பரப்பாக செய்தி வெளியானது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடமி ருந்து மறுப்பு ஏதும் இல்லாத நிலை யில் திருவாரூர் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

ஆனால் அதே நாளில் சென்னை யில் இருந்து கூத்தாநல்லூர் வட்டம், புள்ளமங்கலம் கிராமத்திற்கு வருகை தந்த குடும்பத்தினரில் வாகன ஓட்டுனரான 26 வயது இளை ஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை நிர்வாகத்திடமிருந்து செய்திக் குறிப்பும் வெளியாது.  இந்த நிலையில் 20 ஆம் தேதியன்று இரவு மாநில சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி மீண்டும் திருவாரூர் மாவட்டத்தில் 32 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் 20 ஆம் தேதியன்று மீண்டும் 32 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் என்று செய்தி வெளியானது மக்கள்  மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி யது. 

அதுமட்டும் இல்லாமல் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவரையும் சேர்த்தால் எண்ணிக்கை 33 ஆக வர வேண்டும். ஏன் இந்த குழப்பம். மக்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு குறித்து வெளிப்படையாக அறிவிப்பதில் அரசிற்கு என்ன பிரச்சனை. திருவாரூர் மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக வைத்துக் கொண்டு அதே நேரத்தில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ள சூழ்நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் ? தமிழகம் முழுவதும் மக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மேற்கண்ட செய்தி உதாரணம்.  குறைந்தபட்சம் ஒரு ஊராட்சிக்கு 50 பேர், நகராட்சிக்கு 100 பேர் மற்றும் பேரூராட்சிக்கு 100 பேர் என்று கணக்கிட்டு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் குறைந்தபட்சம் 22 ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை செய்தால் மாவட்டத்தின் உண்மை நிலை தெரியவரும். அதுமட்டுமல்லாமல் முதல் வரிசை பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் செய்தி ஊடகத்துறையினருக்கும் விடுபடாமல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.  உண்மைத் தன்மையுடன் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.