tamilnadu

img

பள்ளி நூலகத்துக்கு புத்தக அன்பளிப்புத் திட்டம்

அறந்தாங்கி, ஜூலை 2- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் திசைகள் மாணவ வழி காட்டு அமைப்பு சார்பாக பள்ளி நூலகத்திற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.  திட்ட இயக்குநர் ஆசிரியை யாஸ்மின் ராணி வரவேற்புரை  ஆற்றினார். உதவித் தலைமை ஆசிரியர் துரைராஜ் தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டார வள மேற்பார்வையாளர்  சிவ யோகம் மற்றும் எவர்கிரீன் பள்ளி தாளாளர் முபாரக் அலி முன்னிலை வகித்தனர். திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி அறிமுக உரையாற்றினார்.  ஆவுடையார் கோவில் வட்டார வள மேற்பார்வையாளர் அனிதா மற்றும் அமரடக்கி ஆதிதிராவிடர் நல விடுதி காப்பா ளர் ஜெயராஜ் கலந்து கொண்டு திசைகள் அமைப்பினர் வழங்கிய புத்தகங்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார். புத்தகக் கொடையாளர் சேக் அப்துல்லா ஏற்புரை ஆற்றி னார். திசைகள் உறுப்பினர் ஆசிரியர்  ரஜினிகாந்த் நன்றி கூறினார்.