tamilnadu

img

பரணி பார்க் பள்ளி சாதனை

கரூர், மே 10-பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளனர். மாணவி வர்ஷினி- 575, ஸ்வேதா- 572, லக்சனாஸ்ரீ- 569, காவ்யஸ்ரீ- 567, ஸ்வேதா- 566 ஆகியோர் பள்ளியில் முதல் ஐந்து இடங்களை பெற்று சாதனை படைத்தனர். மேலும் 570 மதிப்பெண்ணுக்கு மேல் 2 மாணவர்களும், 560 மதிப்பெண்ணுக்கு மேல் 8 மாணவர், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 45 மாணவர்களும் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 2 மாணவர், கணக்குப் பதிவியியலில் 2 மாணவர், பொருளியலில் 3 மாணவர் என மொத்தம் 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.சாதனை மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ், பள்ளி முதல்வர் சேகர், துணை முதல்வர்கள் முத்துக்குமரன், நவீன் குமார் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.