tamilnadu

img

என்.எஸ்.பி சாலையில் ஆட்டோக்களை அனுமதித்திடுக!

திருச்சிராப்பள்ளி, மே 29-ஆட்டோ-ரிக்சா ஓட்டுநர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 10-வது மாநாடுவெண்மணி இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெற்றிவேல் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார்.  செயலாளர் அறிக்கையைமாவட்டச் செயலாளர் மணிகண்டன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் அன்புசெல்வன் தாக்கல் செய்தார். என்.எஸ்.பி சாலையில் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டும். நலவாரிய பணப் பயன்களை தாமதமின்றிவழங்க வேண்டும். பேட்ஜ் பெற கல்வித்தகுதி என்ற நிபந்தனையை ரத்து செய்யவேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ்விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். மாவட்டத்தின் நிலைமைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக ஜீ.சந்திரன், செயலாளராக எஸ்.மணிகண்டன், பொருளாளராக கே.அன்புசெல்வன், அமைப்பு செயலாளராக வி.சரவணன் உள்பட 15 பேர் கொண்ட புதிய மாவட்டகுழு தேர்வு செய்யப்பட்டது.திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரெட்பாக்ஸ் ஆட்டோ நிலையத்தில்ஓட்டுநராக பணியாற்றிய கஜா(எ)கஜேந்திரன் கடந்த சில தினங்களுக்குமுன் காலமானார். அவரது குடும்பத்தினரிடம் சங்கத்தின் சார்பில் ரூ. 5 ஆயிரம் இறப்பு நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சம்மேளன மாநிலத் தலைவர் குமார் கஜேந்திரன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.  சம்மேளன மாநில தலைவர் குமார்நிறைவுரையாற்றினார். முன்னதாக கிழக்கு பகுதிச் செயலாளர் முத்துசாமிவரவேற்றார். முடிவில் ஆட்டோ சங்கஅமைப்பு செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.