திருச்சிராப்பள்ளி,ஜூலை 2- 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கி அடையாள அட்டை வழங்க வேண்டும். மாதம் மாதம் உத வித்தொகை ரூ .3000 தொடர்ச்சியாக வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பில் மணப்பாறையில் செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செய லாளர் சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்ட தலைவர் குமார், புறநகர் மாவட்ட செயலாளர் ரவி, புறநகர் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சிபிஎம் வட்ட செயலாளர் ராஜகோபால், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாகராஜன், வெங்கடாஜலபதி, ஜேம்ஸ் ஜான் பீட்டர், கலைசெல்வி, நடராஜன், கதிரேசன், சுப்பிரமணி உள்பட திரளானோர் கலந்து கொண் டனர்.