tamilnadu

விழும் நிலையில் மின் கம்பம்

முசிறி, ஏப்.2-தொட்டியம் அருகே திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- நாமக்கல் ரோட்டில் தொட்டியம் அமைந்துள் ளது. முசிறியிலிருந்து தொட்டியம் நோக்கி செல்லும் சாலையில் வரதராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் பாதை அருகேஅமைந்துள்ள மின் கம்பத்தின் உச்சிப் பகுதியில் சிமெண்ட்காரைகள் பெயர்ந்து மின்கம்பம் உடைந்து விழும் ஆபத்தானநிலையில் உள்ளது.வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது மின்கம்பம்உடைந்து ரோட்டின் குறுக்கே விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படஅதிக வாய்ப்புள்ளது. இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து திருச்சி ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;