ஓட்டுநர்களின் போட்டியால் நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்
சின்னாளபட்டி, செப்.2- திண்டுக்கல் - மல்லையாபுரம் சாலையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர், ஆதி லட்சுமிபுரம் அருகே நிறுத்த அனுமதி இல்லாத பகுதியில் திடீரென நிறுத்தினார். பித்தளைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனி யார் மில் வேன் தொடர்ந்து சென்று கொண்டி ருந்தது. வேகமாக பின்தொடர்ந்த மில்வேன், பேருந்தின் பின்பகுதியில் மோதியது. பயணிகள், மில் தொழிலாளர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. இரு வாக னங்களின் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், வாகனங்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. திண்டுக்கல்-தேனி சாலையில், வாகன போக்குவரத்து கடுமை யாக பாதிப்படைந்தது. ஒரு மணி நேரத் திற்குப்பின், செம்பட்டி போலீசார் வந்த னர். பின்னர், வாகனங்களை காவல் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். ஓட்டுநர்களின் ஈகோ காரணமாக, பயணிகளும், மில் தொழிலாளர்களும் நடு வழியில் இறக்கி விடப்பட்டதால் பாதிப்ப டைந்தனர்.
சாலையில் தோன்றிய படுகுழிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சின்னாளபட்டி, செப்.2- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே கசவனம்பட்டி, வெல்லம்பட்டி, கோனுார், சின்னப்பபுரம் பகுதியில், ஏராளமான விவசாயி கள் பூ, காய்கனி சாகுபடி மேற்கொண்டு வருகின்ற னர். இத்தடத்தில் உள்ள கிராமத்தினர், திண்டுக் கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்களுக்கு இத்தடத் தில் விளைபொருட்களை எடுத்துச் செல்கின்றனர். திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைத்துறை பரா மரிப்பில் உள்ள இந்த ரோடு, 20 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. மழையால் சாலையோரப் பகுதிகள் அரிக்கப்பட்டு, பெரும் பகுதிகள் சேத மடையத் துவங்கின. பராமரிப்புதாரர்கள் சார்பில், அவ்வப்போது சாலையின் மொத்த நீள, அகல பகுதிகளின் அளவீடு பணி மட்டுமே நடந்தது. குறைந்தபட்ச பேட்ஜ்-ஒர்க் பணிகளும், முழுமை யாக நடக்கவில்லை. சாலையின் பெருமளவு பகுதிகள் சேதமடைந்து, பல ஆழமான குழிகள் தோன்றியுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். பாதசாரிகளும் பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது. விவ சாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாணவர்கள், இரு சக்கர வாக னங்களில் குழிகளை கடந்து செல்வதில் சிரமம் தொடர்கிறது. இதனை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரப்பர் தொழிலாளர் வேலை நிறுத்தம்
நாகர்கோவில், செப்.2- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் கோதையாறு, மருதம்பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, பரளி யாறு உள்ளிட்ட 9 மண்டலங்களில், அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகள் கீரிப்பாறை, மைலார் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்க ளுக்கு இதுவரை 454 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை போக, மழைக்காலங்களில் சுமார் 60, 70 நாட்கள் வேலை இருப்பதில்லை. இதனால் ஆண்டிற்கு சுமார் 200 லிருந்து 210 நாட்கள் மட்டுமே இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இவர்களுக்கு அரசு வழங்கும் 454 ரூபாய் தினக்கூலியை கொண்டே இவர்கள் தங்கள் குடும்பத்திற் கான உணவு, மருத்துவம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கவனிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு தினசரி ரூபாய் 600 சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்படி கடந்த 2016 டிசம்பர் முதல் சம்ப ளம் உயர்த்தப்பட வேண்டும் . இதற்காக தொழிற்சங்க பிரதிநிதிகள் , அதிகாரிகளை சந்தித்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர் . ஆனால் பேச்சுவார்த்தை யில் எந்த முடிவும் எட்டப்படவில்லை . இதை யடுத்து கடந்த 26 ஆம் தேதியும், 30 ஆம் தேதியும் நாகர்கோவிலில் நடந்த பேச்சு வார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசாணை 9/2019 மூலம் இறுதி ஊதியமாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும், இடைக்கால ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர கோரிக்கைகளை முழுமையாக பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி திங்கள் முதல் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் ரப்பர் பால் வெட்டுதல், ஒட்டு ரப்பர் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் வல்சகுமார் கூறுகையில், 2016 நவம்ப ருக்கு பிறகு ரப்பர் தோட்ட தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. 2016 டிசம்பர் முதல் ஊதிய உயர்வு அமல் படுத்த வேண்டிய நிலையில் 39 முறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. இதன்காரணமாக திங்கள் முதல் 9 ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக செவ்வாயன்று நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் உடன்பாடு ஏற்படும் வரை தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கூறினார்.