திண்டுக்கல்:
வடமதுரையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வன்கொலை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளியை விடுவித்து தீர்ப்பளித்தைக் கண்டித்து சனியன்று வாலிபர் சங்கம், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்புமுன்னணி, சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வடமதுரை அருகேயுள்ள ஜி.குரும்பபட்டி கிராமத்தில் 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது கிருபானந்தமும் அவனது நண்பர்கள் டார்வின்சிங், ஜெயபிரகாஷ் ஆகியோரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து சிறுமியின் மூக்கில்மின்வயரை செலுத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கிருபானந்தம் மட்டும்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று கொலையாளி கிருபானந்தத்தை திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி விடுவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்திந் திய ஜனநாயக மாதர்சங்கம் குழந்தையின் உறவினர்களுடன் சேர்ந்த நீதிமன்றம் முன்பாக தீர்ப்பு வழங்கிய ஒரு மணி நேரத்தில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து மகிளா கோர்ட் நீதிமன்றத் தீர்ப்பைக்கண்டித்து வெள்ளியன்று முடிதிருத்துவோர் சங்கம் சார்பாக 3 லட்சம் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சனியன்று வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கமாநிலக்குழு உறுப்பினர் வனஜா தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் ராணி, மாவட்டத்தலைவர் ஜானகி, திண்டுக்கல் நகரச்செயலாளர் ராஜேஸ்வரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் டி.முத்துச்சாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விஷ்னுவர்த்தன், மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கண்ணன், சிஐடியு சார்பாக ஜோதிபாசு, எம்.கே.சம்சுதீன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிதிருத்துவோர் சங்கம் சார்பாக மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.