சேலம், பிப்.21- சேலம் அருகில் ஓடும் வேனில் ஏற்பட்ட தீ விபத் தால் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சேலம், உடையாப் பட்டி ஆர்டிஓ அலுவல கத்திற்கு எப்சி வாங்க, கரூரில் இருந்து மினி வேன் வெள்ளியன்று வந்து கொண்டிருந்தது. அப் போது, சேலம்-உளுந்தூர் பேட்டை புறவழிச்சாலை யில் கிச்சிப்பாளையம் பிரிவு ரோடு அருகே வந்த போது, வேனில் இருந்து திடீரென கரும்புகை வந்து தீப்பிடித்து எரிய துவங்கியது. இதை யறிந்த ஓட்டுநர், வேனை சாலை யோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி னார். ஆனால் அதற்குள் வேன் முழுவதும் தீ பரவி எரிய துவங்கியது. இந்த தீ விபத்தில் வேன் ஓட்டுநருக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மணல், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதுகுறித்து கிச்சிப் பாளையம் போலீசார், செவ்வாய் பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத் தனர். ஆனால் அதற்குள் வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து கிச்சிப் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தீக்காயமடைந்த வேன் ஓட்டுநரை, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.