தரங்கம்பாடி: நாகை மாவட்டம், பொறையார்,ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பெரியகூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளிலேயே மாடு,ஆடு, குதிரை,பன்றி உள்ளிட்டவை 24 மணி நேரமும் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அன்றாடம் விபத்துகளில் பலர் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். விபத்துக்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட பகுதிகளின் ஊராட்சி நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்திட வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.