tamilnadu

img

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பென்னாகரம், நவ.15- தீபாவளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்து காணப்பட்டது.  தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தளமாக விளங்கும் ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் கர்நாடகா ,ஆந்திரா, கேரளா மற்றும் வெளி  மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி மற்றும் வார விடுமுறை என  தொடர் விடுமுறையினால் ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்பட்டது.  ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி மற்றும் காவிரி கரையோரப் பகுதி களான மாமரத்து கடவு பரிசல் துறை, நாகர்கோவில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும், சின்னாறு பரிசல் துறையில் நீண்ட வரிசையில் நின்று பரிசல் பயணம் மேற்கொண்டு பிரதான அருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளையும், காவிரி ஆற்றின் அழகை குடும்பத்தினருடன் கண்டு ரசித் தனர். இதேபோல், தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அரு வியையும், முதலைப் பண்ணை மற்றும் வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர்.