தருமபுரி, நவ.19- லாரிகளில் அனுமதிக் கப்பட்ட எடையை காட்டி லும், அதிக அளவு சுமை யேற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என தென் மண்டல லாரி உரி மையாளர்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்க நிர் வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண் முகப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்ததா வது, கர்நாடக மாநிலத்தில் லாரிகளில் அனு மதிக்கப்பட்ட எடையை காட்டிலும் கூடு தலாக அதிக உயரம், அகலத்துக்கு சுமை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு அதிக அளவு சுமை ஏற்றும் லாரிக ளுக்கு ரூ.2ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் தீப்பெட்டி, ஜவுளி கள் இவ்வாறு அதிக எடையிலும், அகலம் அதிகமாகவும் ஏற்றப்படுகிறது. இதனால் சாலையில் விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், இந்த வாகனங்கள் செல்லும் போது சாலையில் வேறு வாகனங்கள் பயணிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, இதனை தவிர்க்க லாரிகளில் அதிக உயரம் மற்றும் அகலத்துக்கு சுமை ஏற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். லாரி உரிமை யாளர்களும் இதிலுள்ள பிரச்னைகளை களைய அதிக சுமை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றார். இச்செய்தியாளர் சந்திப்பின் போது, தமி ழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, கர்நாடக மாநில லாரி உரி மையாளர்கள் சங்க தலைவர் மதன்லால் அகர்வால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.