பென்னாகரம், மே 10- ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியரிடம் மனு அளித் தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம்,ஒகேனக் கல் சுற்றுலா தளத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளிக்கு அருகாமையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிகுழு செயலாளர் கே.அன்பு தலைமையில் பகுதி குழு உறுப்பினர்கள் ஜீவா னந்தம், செல்வம் உள்ளிட்டோர் பென்னாகரம் வட்டாட்சியர் சேது லிங்கத்திடம் மனு அளித்தனர்.