tamilnadu

img

பென்னாகரம் அருகே 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

பென்னாகரம், அக். 17- பென்னாகரத்தை அடுத்த போடூரில் 18- ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த  நடுகல் கண்டெடுக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அளேபுரம் அரசு உயர்நிலைப் பள் ளியில் பணியாற்றும் வரலாறு ஆசிரியர்கள் கணேசன், முருகா  சீலநாயக்கனூர் பள்ளியில் பணியாற்றும் வரலாறு ஆசிரியர் திருப்பதி, பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி தமிழாசிரியர் பெருமா மற்றும் தெலுங்கு கலாச்சார ஆள் வாளர் புலிகேசி பிரணவகுமார், ராஜேந்திரன் ஆகி யோர் கொண்ட குழுவினர் போடூரில் களப்பயணம் மேற் கொண்டனர்.

 அப்போது  போடூர் ஏரி அருகே ஒரு கையில் வாலும், ஒரு கையில் துப்பாக்கியுடன் இருக்கும்  நடுக்கல் ஒன்றை கண்டு பிடித்தனர். இதை ஆய்வு செய்ததில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  போர் வீரர் எனவும்,  ஆநிரைகளை (பசு) எதிரியி டமிருந்து பாதுகாக்க போரிட்டு போரில் இறந்த வீரரின் நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், நாயக்கர்கள் ஆட்சி காலத்தை சேர்ந்த இந்த நடு கல்லை, இந்தப் பகுதியிலுள்ள பத்மசாலியர்மடம் கிரா மம் போடூர் கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருவ தும் தெரியவந்தது.