tamilnadu

தருமபுரி, கோபி, திருப்பூர் முக்கிய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி,செப்.1- தருமபுரி அருகே மல்லிக்குட்டை பிரிவு, சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மல்லிக்குட்டை  ஊருக்கு செல்லும் சாலை சந்திக்கின்றது. இந்த சந்திப்பு வழியாக நூற்றுக் கணக்கான வாகனங்கள், தருமபுரி மார்க்கத்தில் இருந்து  குப்பாங்கரை, மல்லிக்குட்டை, பாலக்கோடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு செல்கின்றன. மேலும்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர வாக னங்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் தருமபுரி மல்லிக்குட்டை பிரிவு சாலையில், வாகனங்கள் தெரிவதற்காக மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும் வாகன ஓட்டிகள்  பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் தனியார் கல்லூரி, அரசு பாலி டெக்னிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளி  மற்றும் கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும் மல்லிக் குட்டை- தருமபுரி பிரிவு சாலையை கடந்து தான் செல்ல  வேண்டும். இந்நிலையில் உயர் மின் கோபுர விளக்கு  இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி  காயமடைந்து வருகின்றனர். எனவே விபத்தை தவிர்க்க,  உயர் மின் கோபுர விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தும் முகாம்

கோபி, செப். 1- கோபிசெட்டி பாளையம் ோட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக வாக்காளர் சேவை மையம் ஞாயிறன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் புதிதாக வாக் காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் சேவை மையத்தை கோபி செட்டிபாளையம் கோட் டாட்சியர் ஜெயராமன் தொடங்கி வைத்து வாக் காளர் சரிபார்க்கும் இணையதளம் சரியான முறையில் வேலை செய் கிறதா என்று பரிசோதனை செய்து, பின் இணை யதளத்தை கையாளுவது குறித்து தேர்தல் பிரிவு அலுவலருக்கு பயிற்சி அளித்தார். இந்த சேவை மையத்தின் மூலம் வாக் காளர்கள் முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு பிழை திருத்தம் உள்ளிட்ட பல் வேறு விதங்களில் வாக் காளர் அடையாள அட்டையை சரிசெய்து கொள்ளமுடியும் எனவும்  கோட்டாட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் விஜயகுமார், நேர்முக உதவியாளர் தியாகராஜ், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் செல்வக்குமார், விஜய சாமுண்டீஸ்வரி மற்றும்  தேர்தல் பிரிவு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

பணியின் போது இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு

திருப்பூர், செப். 1- திருப்பூர், சந்திராபுரத் தில் உள்ள பனியன் ஏற்று மதி நிறுவனத்தில் வணங் காமுடி என்ற தொழிலாளி கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி இரவு நேர பணியின் போது மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் அவரது குடம்பத்தினருக்கு இஎஸ்ஐ நிறுவன கிளை மேலாளர் முன்னிலையில், மனிதவள மேம்பாட்டு அலு வலர் இழப்பீடாக ரூ.88 ஆயிரத்து 388-ஐ வழங்கி னார். மேலும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க உத்தரவிட் டுள்ளார்.