தருமபுரி, பிப். 22- சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி களுக்கு பாராட்டு விழா சனியன்று தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் மாநில பேரவைக் கூட்டம் கடந்த 2019 ஆகஸ்ட் 30,31 ஆகிய தேதிகளில் தரும புரியில் நடைபெற்றது. இந்த மாநில பேரவைக் கூட்டத்தை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனியன்று நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவிற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், வரவேற்புகுழு தலைவருமான எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு செயலாளரும், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவருமான சி.எம்.நெடுஞ்செழியன் வரவேற்றார். இக்கூட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பி.சுந்தரம்மாள், மாநில பொதுச்செயலாளர் எஸ்.நூர்ஜகான், பொருளாளர் பி.பேயதேவன், மாநில துணைத்தலைவர் கே.அண்ணாதுரை, மாநில செயலாளர் ஆர்.எம். மஞ்சுளா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் கே.புகழேந்தி ஆகி யோர் பேசினர். நிறைவாக பொருளாளர் கே.தேவகி நன்றி கூறினார்.