தருமபுரி, ஜூன் 14- தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவி லான ஆலோசனைக் கூட் டம், மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி பேசியதாவது, இ-பாஸ் பெற்று வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்க ளிலிருந்து வருபவர்களை சோதனைச் சாவ டியிலிருந்து செட்டிக்கரைக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா பாதித்த அரசு அலுவலர்க ளுக்கும், மருத்துவமனையில் தனி படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்க ளிலிருந்து வந்தவர்களை கண்காணிக்க 50 பேர் கொண்ட குழு அமைத்து கிராம ஊராட் சிகளில் பயிற்சி கொடுக்க வேண்டும். 4 மண்டலமாக பிரித்து கொரோனா பரவ லைத் தடுக்க மண்டல அலுவலர்கள், வட் டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் தினமும் மேற்கொண்ட நட வடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளிமா நிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்திலி ருந்து இ-பாஸ் வாங்காமல் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து வருபவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் புதிய தாக வருபவர்களை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க ஒரு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, 100 நாள் வேலை வாய்ப்பு பணியில் ஈடுபவர்களை பயன்ப டுத்தி கிராமத்திற்கு புதியதாக வந்தவர்க ளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். நோய்தொற்று அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்களிருந்து வரு பவர்களை கண்டறிந்து தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். தமி ழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்து ழைப்பு வழங்கிட வேண்டும் என கூறினார்.