tamilnadu

img

டெங்கு எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

தருமபுரி, நவ.14- பாலக்கோடு அருகே டெங்கு நோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் பெல்ரம் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கோட்டூர்,  கரகூர் ஆகிய கிராமங்களில் டெங்கு நோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி வியாழனன்று நடைபெற் றது. இப்பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்ப ழகன் துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர்கள் எம்.சிவ குரு,  நவீன், சுகாதார மேற்பார்வையாளர் ஏ.சேகர், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்செல்வம், சண்முகம் ஆகியோர் கொசுக்கள் உற்பத்தியாகும் விதங்கள் குறித்தும், அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும்  விளக்கிப் பேசினர். இப் பேரணியில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுவோம். கொசுப் புழுக்களை அழிப்போம். கொசுகளை ஒழிப்போம். டெங்குவை தடுப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.