tamilnadu

சித்தேரி பழங்குடியின நலப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி

தருமபுரி, ஜூலை 18 -  12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சித்தேரி அரசு பழங் குடியின நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊரட்சியில் 60 -க்கும் மேற்பட்ட மலைக் கிராமங் கள் உள்ளன. இந்த சித்தேரி மலை கிராமங்கள் அரூர் நகரில்  இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில், சித்தேரி அரசு பழங்குடியின நல உண்டு  உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 29 பேர் பிளஸ் 2 தேர்வினை எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ,  மாணவியர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.வைரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட் டியுள்ளனர்.