மன்னார்குடி, மார்ச் 2- ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் கூத்தாநல்லூரில் நடைபெற்று வரும் தொடர் இருப்பு போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. தினம் தினம் ஆயிரக்கணக்கில் கூடும் முஸ்லீம் மக்களை வாழ்த்தி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் உரையாற்றி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கூத்தாநல்லூர் வந்து உரையாற்றி சென்றனர். போராட்டத்தின் போக்கை அன்றாடம் கூர்ந்து கவனித்தும் வருகின்றனர். ஒருநாள் மாலைப் பொழுதில் கூத்தாநல்லூர் தொடர் இருப்பு போராட்ட சதுக்கத்தில் முஸ்லீம் பெண் குழந்தைகள் எழுப்பிய முழக்கங்கள் எல்லோர் உள்ளங்களிலும் நாட்டுப்பற்றையும் சுதந்திரப்போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியது. கையில் ஒரு பெண் குழுந்தை தப்ஸ் தாளக்கருவியில் மார்ச் நடையில் அமைந்த தாளத்தை இசைக்க அதனூடே தெறித்த சில வைர வரி கோஷங்கள் :
ஜிந்தாபாத் ஜிந்தாபாத் இன்குலாப் ஜிந்தாபாத் ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம் சி ஏ ஏ, வை ஏற்கமாட்டோம் என் ஆர் சி, -ஐ ஏற்கமாட்டோம் என் பி ஆர், -ஐ ஏற்க மாட்டோம் ஆர்எஸ்எஸ் பாஜ க அரசே சி ஏ ஏ, வை ஏற்க மாட்டோம் இந்திய சுதந்திர போராட்டத்தில் நாங்கள் எழுப்பிய முழக்கங்களும் சிந்திய ரத்தம் ஒவ்வொரு துளியும் நாங்கள் வாங்கிய ஒவ்வொரு அடியும் எங்கள் மூதாதையரின் தியாகங்களில் ஒருதுளியளவு பங்காவது ஆர்எஸ்எஸ், பாஜகவே உங்களுக்குண்டா உங்களுக்குண்டா இந்திய பெண்களின் கண்ணீரும் இந்திய மக்களின் அழுகுரலும் வீதியில் தெறிக்கும் ஆவேசமும் பாசிசத்தை நிச்சயம் அழிக்கும் பாசிசத்தை நிச்சயம் அழிக்கும் மோடியே அமித்ஷா வே பாசிசத்தை நிச்சயம் அழிக்கும் ஆர் எஸ் எஸ், பாஜகவே நாங்கள்தான் இந்தியர்கள் நாங்கள்தான் குடிமக்கள் போலி தேசியம் பேசி நடிப்பார் அவர்கள்தான் ஆரியர்கள் போலி தேசியம் பேசி நடிப்பார் அவர்கள்தான் ஆர்எஸ்எஸ் இந்து-முஸ்லீம் அனைவரும் இந்திய நாட்டில் ஒன்றுதான் ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம் சி ஏ ஏ - வை ஏற்கமாட்டோம் உரத்தக் குரலில் எழுப்பிடுவோம் ஜிந்தாபாத் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் பறக்குது பார் பறக்குது பார் மூவண்ணக்கொடி பறக்குது பார் எங்கள் கொடி பறக்குது பார் பதறுது பார் பதறுது பார் சங்கிக் கூட்டம் பதறுது பார் கரங்களை உயர்த்திக் கேட்கிறோம் மாட்டுக்கு மட்டும் பாதுகாப்பு? மனுஷனுக்கு வைக்கிற ஆப்பு? சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி எங்களைப் பிரிக்க நினைக்காதே இந்திய மண்ணில் பிறந்தோர் நாம் ஒரு தாய் வயிற்றுபிள்ளைகள்தாம் இந்து - முஸ்லிம் ஒன்றுதான் உங்கள் வாயில் மண்ணு தான் ஜிந்தாபாத் ஜிந்தாபாத் இன்குலாப் ஜிந்தாபாத்
- நீடா சுப்பையா