காசு இருந்தவர்கள் பொருட்களை அள்ளினர்; ஏழைகள் தவித்தனர்
சென்னை, ஏப்.25- சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநக ராட்சிகளில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணிமுதல் ஏப்ரல் 29 புதன்கிழமை இரவு 9 மணிவரை முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி திடீரென வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார்.
இதனால் சனிக்கிழமை காலையிலேயே கடைகளுக்கும் சந்தைகளுக்கும் மக்கள் படையெடுத்தனர். கொரோனா தொற்றைத் தடுக்க தனி மனித இடைவெளியுடன் நிற்க வேண்டும் என்ற உத்தரவை மக்கள் பொருட்படுத்தவில்லை. காரணம் அரசின் தான்தோன்றித்தனமான அறிவிப்பால் மக்கள் கிடைத்த பொருட்களை வாங்கிச் சென்றனர். அரசு கொடுத்த ரூ.1000 ஓரிரு நாளிலேயே செலவானதால் ஏழை எளிய மக்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். சிலர் கடன் வாங்கி தேவையான சில பொருட்களை மட்டும் வாங்கிச் சென்றனர்.
தெருவில் இறங்கிய மக்கள்
இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அனைத்து கடை களும் அடைக்கப்படும் என்று அரசு அறிவித்ததால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கு வதற்காக அளவில் கடைகளில் குவிந்தனர். குறிப்பாகக் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி யைப் பின்பற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு உரிமையா ளர்கள் அறிவுறுத்தியபடி இருந்தனர். ஒருசில கடைகளில் மக்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக சந்தை களில் மக்கள் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்கி னர்.
ஒரு சில நாட்கள் மட்டுமே...
சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் சிஎம்டிஏ, மாநகராட்சி, டியுசிஎஸ் சார்பில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் ஒரு சில நாட்களே விற்பனை செய்யப்பட்டன. பின்னர் இந்த பணி ஸ்வீக்கி. டுன்சோ போன்ற தனியார் ஆன்லைன் விநியோக நிறுவனங்களிடம் ஒப்படைக் கப்பட்டன.
அரசு சார்பில் ரூ.500, ரூ.1000 விலையில் குறிப்பிட்ட மாளிகை சாமான்களும் ஒரு சிலநாட்கள் தான் ஒரு சில இடங்களில் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டன. மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்தால் தான் நோய்த்தொற்று பரவல் குறையும் என்பதற்காக முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அரசு கூறியது. ஆனால் திடீர் அறிவிப்பே அரசின் நோக்கத்தை சிதைத்துவிட்டது.
கோயம்பேட்டில் குவிந்த மக்கள்
கோயம்பேடு சந்தையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. சிறு வியாபாரிகள், பொதுமக்க ளில் பலர் முகக்கவசம் கூட அணியாமல் வந்து சென்றதால் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை கேள்விக்குறியானது.
கோவை மாநகராட்சி
சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி உள்பட பல நகரங்களிலும் இதே நிலைதான் காணப் பட்டது. கோவை ஆர் .எஸ். புரம் உழவர் சந்தை, தடாகம் சாலை யிலுள்ள அம்மா பசுமை பண்ணை நுகர்வோர் கடை , காந்தி மாநகர், கணுவாய் உள்ளிட்ட பெரும் பகுதிகளில் மக்கள் நெருக்கமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட்டமாகக் கூடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். வீடுகளுக்கே நேரடியாக காய்கறிகள், மளிகை சாமான்கள் விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை அரசு உறுதிப்படுத்தாத காரணத்தால் இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை
மக்கள் கூட்டத்தைப் பார்த்து சில வியாபாரிகள் காய்கறி கள் மற்றும் மளிகை பொருட்களை மிகவும் அதிக விலைக்கு விற்றனர். குறிப்பாகக் காலை 8 மணி அளவில் ரூ.50 முதல் ரூ.80 க்கும் விற்கப்பட்ட காய்கறிகள் 10 மணி அளவில் ரூ.150 முதல் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
இறைச்சிக் கடை
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மட்டுமே முழு ஊடரங்கு என அறிவிக்கப்பட்ட போதிலும் ஊரக பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டமாகக் கூடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
4 நாட்களில் என்னென்ன இயங்கும்
இந்த நான்கு நாட்களும் மருத்துவம் மற்றும் அத்தியா வசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளும் அனு மதிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும். இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்குத் தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அம்மா உணவகங்கள் செயல்படும்
அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம் மையங்கள்) வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
பிற பணிகளுக்கு முழுமையான தடை
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நட மாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனி யார் நிறுவனங்கள் செயல்படாது. மேற்குறிப்பிட்ட மாநக ராட்சிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறை யில் உள்ள கட்டுப்பாடுகள், அனுமதிகள் தொடரும்.
கிருமி நாசினி தெளிக்கப்படும்
இக்கால கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமை யான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இப்பகுதி களில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப் படும். மாநகரத்தில் பிறபகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழு மையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.