சென்னை, மே 14- சென்னை எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த மணிமாறன், ஊரடங்கால் இரண்டு மாத மாக வேலை இல்லாமலும் மன உளைச்சலுக்கு ஆளானார். வருவாய் இல்லாததால் மனமுடைந்த மணிமாறன், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டதாக தெரிகிறது. இதுகுறித்து எம்ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.