tamilnadu

img

ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ்

சென்னை, மார்ச் 9- நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி  அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல். ஏ.க்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவில்லை. இதனால் திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை  எதிர்த்து 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில்  பேரவைத் தலைவருக்கு காலக்கெடு  விதிக்க முடியாது என்றும் இந்த விவ காரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. இந்த தீர்ப்பின் நகல் தமிழக சட்டப் பேரவை செயலகத்துக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.க்க ளுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.