சென்னை,மார்ச் 3- தமிழகத்தில் பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தித் தொழிற் சாலைகள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க புதிய நிறு வனம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் பாது காப்புத்துறை தளவாட உற்பத்தித் தொழிற்சாலை கள் அமைக்கப்படும் என 2018 - 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ கத்தில் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் அமைப்ப தற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. படைக்கலத் தொழிற்சாலை வாரியமும், தனி யார் துறையினரும் மூவாயிரத்து நூறு கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. இது வரை 6 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திய நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்ச னின் கேள்விக்குப் பாதுகாப்புத் துறை இணைய மைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது