tamilnadu

img

இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவாம்

அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார்

சென்னை,அக்.10- டெங்கு காய்ச்சல் பரவு வதை தடுக்க வகை செய்யும் நடமாடும் மருத்துவமனைகள், நிலவேம்பு வழங்கும் வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளா கத்தில் இருந்து வியாழனன்று புறப்பட்டன. இந்த வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனங்கள் இயக்கப்படும்.  காய்ச்சல் பரவுவதை தடுக்க அமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவக்குழுக்கள் டிசம்பர் மாதம் வரை செயல்படும்.  காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.  ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் புதிதாக வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.